Saturday, May 12, 2012

ரத்த சந்தனம்

இன்னாபா.. நல்லா இருக்கீங்களா.. காலையிலேயே ஆரம்பிச்சிட்டியாப்பன்னு பொலம்புறது கேக்குது....:)

விஷயத்துக்கு வருவோம்..

ஃபிளாஷ்பேக் No: 032912:

கடந்த மாதம் நான் பத்மநாபபுரம் பேலஸில் போயிருந்தேன்.. அங்கு எனக்கு கிடைத்தது தான் இந்த "ரத்த சந்தனம்".. (BLOOD SANDAL).. யாராச்சும் கேள்வி பட்டதுண்டா. கூகிள்'ல சேர்ச் பண்ணி பாருங்க.. blood sandal wood..

அங்கிருந்த  ஒரு வீட்டில் தண்ணி குடிக்கும் போது தான் இது என் கண்ணில் பட்டது. சரி தேவப்படுமேன்னு சும்மாக்காச்சும்  கேட்டேன். உடனே அங்கிருந்த ஒரு பாட்டி எடுத்துக்கோப்பான்னு பெர்மிசன் கொடுத்துச்சு.. நான் லபக்கிட்டு வந்துட்டேன்..ஆனா அந்த துண்ட  கொஞ்ச நாள்'ல  மிஸ் பண்ணிட்டேன்.. :))))))))) இது போன மாசம் நடந்தது..

இன்று :  இன்னைக்கு காலையில அப்பா  ஒரு மரத்துண்ட துணி துவைக்குற கல்'ல ஒரசி ஒரசி அதுல வர்ற பேஷ்ட சேகரிச்சிட்டு இருந்தாரு.. பக்கத்துல போய் பார்த்தா நான் ஃபிளாஷ்பேக் No: 032912 ல தொலைச்ச அதே மாதிரியான ரத்த சந்தன துண்டு.. ஆனா அது இது இல்ல..





இந்த துண்ட அப்பா ரொம்ப காலாமா வச்சுருக்காராம்.. 75 வர்ஷ பழமையுள்ள துண்டு இதுன்னு பில்டப் பண்ணாரு.. உடனே என் தம்பி வந்து "இந்த துண்ட அஞ்சு வயசுல இருக்கும் போதே பழைய பீரோல இருக்கும்போதே பாத்துருக்கேன்" ன்னு வாக்குமூலம் வேற..

தற்போது எங்க வீட்ல இருக்கும்  மிக தொன்மையான பொருள் இது தானாம்.. ஹ்ம்ம்.. சந்தோசம்..,..

இது மருத்துவ பொருள்.
 தேமல், முக பருக்கள் போக இது பயணப்படும்.. இந்த ரத்த சந்தன கட்டையை தண்ணீரில் ரெண்டு நிமிஷம் வைத்து எடுத்தால் கருப்பு கலர் அப்டியே சிவப்பாக மாறும்.. அதன் பின்  அதை கல்லில் உரசி வரும் சந்தனத்தை முகம், உடலில் பூசி  கொண்டு சண் பாத் எடுத்தால் சாயங்காலம் பருக்கள் காணாமல் போகுமாம்.. போங்கடா டே...








No comments:

Post a Comment